நடப்பு கல்வியாண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களிடம் இருந்து தேர்வு கட்டணத்தொகையை பெற்று, அந்த தொகையை ஆன்லைன் மூலம் வருகிற 20-ந்தேதிக்குள் அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் செலுத்த வேண்டும்.
அதன்படி, செய்முறை கொண்ட பாடங்கள் அடங்கிய பாடத்தொகுப்பில் படிப்பவர்களுக்கு ரூ.225-ம், செய்முறை இல்லாத பாடங்களை கொண்டவர்களுக்கு ரூ.175-ம் தேர்வு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த தேர்வு கட்டணத்தில் இருந்து தமிழை பயிற்று மொழியாக கொண்டு தேர்வு எழுதும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.
அதேபோல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.எஸ்., எஸ்.டி., எம்.பி.சி./டி.சி. பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கும் (தமிழ்வழி தவிர இதர பயிற்று மொழிகளில் படிப்பவராக இருந்தாலும்), பி.சி., பி.சி.எம். பிரிவில் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கும் குறைவாக உள்ள மாணவர்களுக்கும் தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல் அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.