கேட் கீப்பர்கள் பற்றாக்குறையால் குறைக்கப்பட்ட திருவாரூர், காரைக்குடி இடையேயான வழித்தடத்தில் அடுத்த மாதம் முதல் கூடுதல் ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
திருச்சி: திருவாரூர்&காரைக்குடி வழித்தடத்தில் கேட் கீப்பர்கள் பற்றாக்குறையால் ரெயில்கள் இயக்கம் குறைக்கப்பட்டன. தற்போதைய நிலையில் ஒரே ஒரு சிறப்பு ரெயில் மட்டுமே மேற்கண்ட வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மொபைல் கேட் கீப்பர்களை வைத்து நிலைமையை சமாளித்து வருகின்றனர். இதையடுத்து ரெயில்வே வாரியம் கடந்த அக்டோபரில் 72 கேட்கீப்பர் காலிப்பணியிடங்களை முன்னாள் ராணுவ வீரர்கள் மூலம் நிரப்ப அனுமதி அளித்தது. இந்த தேர்வு பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
இது பற்றி திருச்சி ரெயில்வே டிவிஷனல் மேனேஜர் மணீஸ் அகர்வால் கூறும்போது, கேட் கீப்பர் வேலைக்காக முன்னாள் ராணுவ வீரர்களிடம் இருந்து 500&க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த பட்டியல் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரிசல்ட் வந்ததும் தேர்வு செய்யப்படும் நபர்கள் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அடுத்த மாதம் அவர்கள் பணியமர்த்தப் படுவார்கள்.
இதையடுத்து அடுத்த மாதம் கடைசியில் வாரம் 3 முறை இயக்கப்படும் தாம்பரம்&செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில், இருவாரங்களுக்கு ஒருமுறை இயக்கப்படும் எர்ணாகுளம்&வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரெயில், தாம்பரம்&காரைக்குடி தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகிய 3 ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியத்தின் அனுமதி கோர திட்டமிட்டுள்ளோம் என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.