அறந்தாங்கி-புதுக்கோட்டை சோதனைச்சாவடி அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 79 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பொதுமக்கள் அவதி
அறந்தாங்கி நகராட்சியை ஒட்டிய பகுதியான மூக்குடி ஊராட்சி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் சாலை மற்றும் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது. குண்டும், குழியுமான சாலையில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதேபோல் விவசாய நிலத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் நெல் பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் நெல் பயிர்கள் சேதம் அடையும் நிலை ஏற்பட்டு உள்ளது.
79 பேர் மீது வழக்கு
இந்தநிலையில் மழைநீரை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் அறந்தாங்கி-புதுக்கோட்டை சோதனைச்சாவடி அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், நகராட்சி ஆணையர் லீமாசைமன், தாசில்தார் காமராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், சாலை மறியலில் ஈடுபட்ட 79 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனைதொடர்ந்து சாலையில் தேங்கி கிடந்த மழைநீரை பொக்லைன் எந்திரம் மூலம் பாதை அமைத்து நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.