றந்தாங்கி அருகே அரசு கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
புதுக்கோட்டை மவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் தாலுகா பெருநாவலூரில் அரசு கலை மற்றும் அறிவியல் இயங்கி வருகிறது. இக்கல்லூரியின் 7-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் கண்ணன் ஏற்ப்பாட்டில் கல்லூரி திறந்தவெளி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் தலைமை தாங்கி 550 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
இளங்கலையில் 450 பேரும், முதுகலையில் 100 பேரும் என மாணவ, மாணவிகள் வரிசையாக பட்டங்களை பெற்றுச்சென்றனர். இதில் மதிப்பெண் அடிப்படையில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கான நற்பண்புகள் குறித்து உறுதி மொழியேற்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம், ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், மாவட்டக்குழு உறுப்பினர் சரிதா மேகராஜன், கூட்டமைப்பு தலைவர் மணிமொழியன்,
கல்லூரித்துறை தலைவர்கள் திருவாசகம், கணேசன், ராஜேந்திரன், நாராயணசாமி, டேவிட் கலைமணிராஜ், கிளாடிஸ், சிற்றரசு உள்ளிட்ட மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.