ஒவ்வொரு ஆண்டும் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளான ஜனவரி 12-ந்தேதி நாடு முழுவதும் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று இளைஞர் எழுச்சி நாள் மற்றும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கி விவேகானந்தர் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். முதுகலை வரலாற்று ஆசிரியர் மதியழகன் இளைஞர் எழுச்சி நாள் உறுதிமொழியை வாசிக்க, அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். அப்போது பள்ளி நாட்காட்டி அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. மேலும் பள்ளியில் சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அனைத்து ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.