கோட்டைப்பட்டினம் ஊராட்சி மாவட்டத்திலேயே பெரிய ஊராட்சி ஆகும். இங்கு சுமார் 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ளது. இந்நிலையில் இதே பகுதியில் தபால் நிலையம் இயங்கி வருகிறது .
இந்த தபால் நிலையத்தில் தினந்தோறும் மக்கள் தபால் அனுப்புவது, மணியார்டர், ஆதார் பதிவு போன்ற பல்வேறு சேவைகளை பெற்று வந்தனர். இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இப்பகுதியில் உள்ள தபால் நிலையத்திலுள்ள இணைய சேவை சுத்தமாக இயங்கவில்லை. இதனால் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர். ஒரு சில நபர்கள் அருகே உள்ள மீமிசல் மற்றும் மணமேல்குடி ஆகிய ஊர்களில் சென்று தபால்கள் அனுப்பி வருகின்றனர். ஆகையால் தபால் நிலையத்தில் செயல்படாத இணைய சேவையை உடனே சரி செய்து தரும்படி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.