நாட்டின் 75-ம் சுதந்திரதின விழா ஆண்டின் கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக தாலுகா தொடங்கி மாநிலம் முழுவதும் 10 வயதுக்கு மேற்பட்டோர் இந்திய குடிமக்கள் பல்வேறு போட்டிகளில் பங்குபெற விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான விவரங்கள் https://amritmahotsav.nic.in.competitions.htm என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. தங்களது படைப்புகளை ஒளிப்பட வடிவில் மேற்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தாலுகா அளவிலான போட்டிகள் வருகிற 31-ந் தேதி வரையும், மாவட்ட அளவிலான போட்டிகள் அடுத்த மாதம் (பிப்ரவரி) 15-ந் தேதி முதல் 28-ந் தேதி வரையும், மாநில அளவிலான போட்டிகள் மார்ச் 10-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையும், இறுதியாக தேசிய அளவிலான போட்டிகள் ஏப்ரல் மாதம் 13-ந் தேதி அன்றும் நடைபெறும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும். எனவே மேற்காணும் போட்டிகளில் தகுதியுள்ள அனைவரும் பங்கு பெற்று இந்திய அரசின் சுதந்திரதின விழா சிறப்பாக நடைபெற பங்களிக்க வேண்டும். மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளாக முதல் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ 04322-299382 தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம் என கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.