புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்காமல் இருப்பது தெரியவருகிறது. எனவே முககவசம் அணிவதை கட்டாயமாக்கும் வகையில் தமிழக அரசால் 12-ந் தேதி அரசாணை பிறப்பித்து. அதன்படி முககவசம் அணியாதவர்களிடம் தண்டனை தொகையாக ரூ.200 வசூலிக்கப்பட்டு வந்ததை உயர்த்தி ரூ.500 வசூலிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் அபராதத்தினை தவிர்த்திடும் வகையிலும், நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காகவும் பொது இடங்களுக்கு செல்லும்பொழுது அவசியம் முககவசம் அணிய வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.