இந்த நிலையை மாற்றும் வகையில் அதிரை சிறுவர்களை இளம் வயதிலேயே தொழில்முறை போட்டிக்கு தயார்படுத்தும் முயற்சியில் அதிரை சிட்னி கிரிக்கெட் அணி நிர்வாகம் இறங்கியுள்ளது.
இதற்காக STITCH பந்தில் விளையாட சிறுவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பயிற்சி அளித்து வருகின்றனர். அதிரை சகோதரர்கள் சிறுவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் 16 வயதுக்கு உட்பட்டோருக்காக சிட்னி ப்ரீமியர் லீக் என்ற பெயரில் கிரிக்கெட் தொடரை கடந்த ஆகஸ்டு மாதம் நடத்தினர்.
மேலும் ஒருபடி சென்று பிரபல தொழிற்முறை கிரிக்கெட் கிளப்புகள் பங்குபெறும் மாபெரும் தொழிற்முறை கிரிக்கெட் தொடரை சிட்னி அணியினர் கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி தொடங்கினர்.
இடையில் எதிர்பாராமல் மழை குறுக்கிட்டு போட்டிகள் தடைபட்டாமல் மனம் தளராமல் மைதானத்தை மீண்டும் தயார் செய்து தற்போது தொடரை சிறப்பாக நடத்தி வருகின்றனர். இப்போட்டியில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பல தலைசிறந்த வீரர்கள் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.
முதல் பரிசாக ₹50,000, இரண்டாம் பரிசாக ₹30,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தலா ₹15,000 பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. அனைத்தையும் கடந்து அதிரையில் இதுவரை இல்லாத வகையில் இப்போட்டியை யூடியூபில் பிரபல விளையாட்டு தொலைக்காட்சிகளை போல் SCORECARD, வர்ணனையுடன் சிட்னி அணியினர் நேர்த்தியாக நேரடி ஒளிபரப்பு செய்து வருகின்றனர்.
இதனால் வெளிநாடுகள், வெளியூர்களில் வாழும் அதிரை மக்களும், தொடரில் விளையாடும் மற்ற அணி ரசிகர்களும் கண்டுகளிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கிரிக்கெட் தொடரை நேரடி ஒளிபரப்பு செய்து வீரர்களின் விளையாட்டு திறமையை உலகறிய செய்து முன்மாதிரியாக உருவெடுத்துள்ள சிட்னி அணியினருக்கு GPM மீடியா சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.