ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கடலோர கிராமங்களில் பரவும் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் தேங்கிய தண்ணீரில் உற்பத்தியான கொசுக்களாலும், சுற்றுப்புற சுகாதாரமில்லாததாலும் டைபாய்டு மற்றும் டெங்கு காய்ச்சல்கள் இங்கு எளிதில் பரவுகின்றன.
குடும்பத்தில் ஒருவருக்கு ஏற்படும் காய்ச்சலால் மற்றவர்களுக்கும் தொற்றி பரவுகிறது. பெரும்பாலும் இருமல், காய்ச்சல், தொண்டை வலி இருப்பதால் கொரோனாவாக இருக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
கொரோனா, டெல்டா வைரஸ் பரவலைத்தொடர்ந்து ஒமைக்கிரான் பரவலால் போதிய விழிப்புணர்வு இல்லாத இந்தப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சுகாதாரத்துறையினர் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் சாக்கடை, தண்ணீர் தேங்கும் இடங்கள், நீர்நிலைகளை ஆய்வு செய்து தண்ணீர் தேங்காமல், சுகாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும் தொற்றுக்கள் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.