உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. தற்போது கரோனா பரவல் அதிகரித்திருப்பதற்கு ஒமிக்ரான் வகை கரோனாவே காரணமாக இருந்து வருகிறது. இதனையடுத்து தற்போது ஏற்பட்டுள்ள கரோனா அலையை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும், பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் ஐக்கிய அரபு அமீரகம், தனது தலைநகரமான அபுதாபிக்கு வரும் பயணிகள் பூஸ்டர் டோஸ்களை செலுத்தியிருக்க வேண்டும் என்ற புதிய விதியை அறிவித்துள்ளது. தங்கள் நாட்டு சுகாதார செயலி மூலம் இந்த விதிமுறையை ஐக்கிய அரபு அமீரகம் வெளிவுலகிற்குத் தெரியப்படுத்தியுள்ளது.
மேலும் அபுதாபிக்கு வருபவர்கள், இரண்டு வாரங்களுக்குள் எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனை சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஐக்கிய அரபு அமீரகம் கூறியுள்ளது. இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுள்ளவர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன் களப்பணியாளர்களுக்கு மட்டுமே தற்போது பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுவதால், இந்தியர்கள் அபுதாபிக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.