புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட புதிய மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
கந்தர்வக்கோட்டையில் இல்லம் தேடி கல்வி மையங்கள் தொடக்கம்
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம்தேடி கல்வி திட்ட புதிய மையங்கள் மஞ்சம்பட்டி மற்றும் கொத்தகபட்டி கிராமங்களில் தொடங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவுப்படி, முதன்மை கல்வி அதிகாரி சாமி.சத்தியமூர்த்தி வழிகாட்டுதலின் படியும் கந்தர்வகோட்டை ஒன்றியம் மஞ்சம்பட்டி மற்றும் கொத்தகபட்டி கிராமங்களில் புதிய மையங்கள் தொடங்கப்பட்டது,
நிகழ்வில் மஞ்சம்பட்டி தலைமையாசிரியர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். கந்தர்வகோட்டை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் தங்கராசு, ரகமத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டார செயலாளர் சின்னராஜா விழிப்புணர்வு பாடல்கள் பாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் கலந்து கொண்டு இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கொரோனா காலத்தில் மாணவர்களிடம் விட்டுப்போன கல்வியை சரிசெய்யும் விதமாக இல்லம் தேடி கல்வி திட்டத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருவதாக கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள் நிரோஷா, லோகாம்பாள், கிருத்திகா, பானுப்பிரியா, சீலாராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மஞ்சம்பட்டியில் இல்லம் தேடி கல்வித்திட்ட புதிய மையம் தொடங்கப்பட்ட போது எடுத்த படம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.