கோபாலப்பட்டிணத்தில் தனியார் நிறுவனத்தின் புதிய செல்போன் கோபுரம் (டவர்) அமைக்கும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் புதிய செல்போன் கோபுரம் அமைக்க வேண்டும் என பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.
கோபாலப்பட்டிணத்திற்கு என்று தனியாக செயல்பட்டு வந்த செல்போன் கோபுரம் செயலிழந்ததாலும் தற்பொழுது செல்போன் கவரேஜ் சரியாக கிடைக்காததாலும் மாணவ செல்வங்கள் இணைய வழியில் படிப்பதற்கும், அயல் நாட்டில் உள்ள உறவினர்களுடன் கலந்துரையாடுவதற்கும் மக்கள் பெரும் சிரமங்களை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒரு அவசர செய்தியை கூட பகிர்ந்து கொள்ள முடியாத நிலையில் மன உளைச்சலுக்கு ஆளாகி வந்தனர் கோபாலப்பட்டிண மக்கள்.
செல்போன் ஒலித்தால் வீட்டை விட்டு வெளியிலோ அல்லது மாடிக்கோ சென்று தான் பேசும் நிலைமை உள்ளது. இதனால் முதியவர்களும், பெண்களும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.
செல்போன் சிக்னல் கிடைக்காததால் செல்போனை ஒரு சிலர் வீட்டின் வெளிப்பகுதியிலும், ஜன்னல் ஓரங்களிலும் மற்றும் வீட்டு மாடியிலும் வைத்துக் கொண்டு காத்திருப்பதும் வாடிக்கையாகி போனது. மேலும் மாணவ செல்வங்களின் படிப்புகளும் பாதிப்புக்குள்ளானது.
கடந்த 27.12.2021 தேதியில் தனியார் நிறுவனம் தனது புதிய செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை துவக்கி பணி நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான செல்போன் கோபுரம் அமைக்கபெற்று விரைவில் செயல்பாட்டிற்கு வந்தால் கோபாலப்பட்டிணம் உள்நாடு , வெளியூர் மற்றும் வெளிநாடு வாழ் கோபாலப்பட்டிணம் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.