நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் நகர்ப்புற உள் ளாட்சி தேர்தல் தொடர் பான தேதி அறிவிப்பு நேற்று மாலை வெளியானது. இதில் வேட்பு மனு தாக்கல் நாளைதேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந் தேதி நடைபெறஉள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகின்றன.
மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய 2 நகராட்சிகளில் வார்டு கவுன்சிலர்களுக்கும், அன்னவாசல், அரிமளம், இலுப்பூர், கீரனூர், கீரமங்கலம், ஆலங்குடி, பொன்னமராவதி, கறம்பக்குடி ஆகிய 8 பேரூராட்சிகளில் வார்டு உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் புதுக்கோட்டை நகராட்சியில் 42 வார்டு கவுன்சிலர்களும், அறந்தாங்கி நகராட்சியில் 27 வார்டு கவுன்சிலர் களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வார்டு உறுப்பினர்கள்
பேரூராட்சிகளில் வார்டு உறுப்பினர்களை பொறுத்த வரை தலா 15 பேர் தேர்ந்தெ டுக்கப்பட உள்ளனர். இதுத விர நகராட்சிகளில் தலைவர் துணை தலைவர் பதவிகளுக் கும், பேரூராட்சிகளில் தலைவர், துணை தலைவர் பதவிக ளுக்கும் மார்ச் மாதம் 4-ந் மறைமுக தேர்தல் நடை பெற உள்ளது.
புதுக்கோட்டை நகராட்சியில் 28, 42 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டவர்களில் பொது வார்டாகவும், 32, 33, 37ஆகிய வார்டுகள் தாழ்த்தப் பட்டவர்களில் பெண்களுக் கும், 3, 6, 7, 8, 9, 11, 12, 13,14, 18, 19, 21, 24, 26, 30, 31, 36, 39 ஆகிய வார்டுகள் பொதுப்பிரிவில் பெண்களுக்கும் ஒதுக்கப்பட் டுள்ளது. இதுதவிர மீதமுள்ள வார்டுகளான 1, 2, 4, 5, 10, 15, 16, 17, 20, 22, 23, 25, 27, 29, 34, 35, 38, 40, 41 ஆகிய வார்டுகள் பொதுப்பிரிவாகும். இதில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். இதே போல அறந்தாங்கி நகராட்சி, பேரூராட்சிகளில் வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளன.வாக்குப்பதிவு தேதி அறிவிப்பு வெளியான நிலையில் தேர்தல் திருவிழா தொடங்க ஆரம்பித்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.