தமிழகத்தில் மின்னல் வேகத்தில் உயரும் பாதிப்பு; மேலும் 2,731 - பேருக்கு கொரோனா






தமிழகத்தில் மேலும் 2,731 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. நேற்று 1,728 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றைய பாதிப்பு 2,700- ஐ தாண்டி அதிரவைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டது. 

அதன் விவரம் வருமாறு:- தமிழகத்தில் மேலும் 2,731 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  சென்னையில் மட்டும் 1,489- பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்பால் மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  36,805- ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை  12,412- ஆக உள்ளது.  கொரோனாவில் இருந்து மேலும் 674- பேர் குணம் அடைந்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments