தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. எனினும், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
இதையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை மேற்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார். அதில் பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், இன்று முதல் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜனவரி 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்ட நிலையில் ரேஷன் கடைகள் ஜனவரி 30ஆம் தேதி இயங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஜனவரி 30 அன்று பணியாற்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அதற்கு பதிலாக பிப்ரவரி 26ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறாதவர்கள் ஜனவரி 31ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என ஏற்கெனவே தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஜனவரி 30 ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடை இயங்கும் என அரசு தெரிவித்திருப்பது ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிம்மதி அளிக்கும் செய்தியாக உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.