ஜனவரி 31 வரை பொங்கல் பரிசு விநியோகம் - தமிழக அரசு அறிவிப்பு






ஜனவரி 31 ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்பின் அனைத்து நியாயவிலை கடைகளிலும் தற்போது 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் ஜனவரி 31 ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.15 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் பணிகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், பல்வேறு கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவுத்துறை மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இன்று 6 ஆம் தேதி வரை 43 லட்சத்து 85 ஆயிரத்து 111 அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுள்ளனர். சில இடங்களில் சில பொருட்களை விட்டுவிட்டு பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகிக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளதாகவும், இது போன்ற புகார்களை தவிர்த்திட அனைத்து பொது விநியோக திட்ட அங்காடிகளில் பொருட்களின் பட்டியலை வைக்கவும், பொருட்களை பெறுபவர்களிடம் அனைத்து பொருட்களும் உள்ளதா என்பதை சரிபார்க்கவும் கேட்டுக் கொள்ள வேண்டும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 

பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து பணியாளர்களும், மேற்பார்வையாளர்களும் ஒன்றிணைந்து இந்த பணியை எந்த வித புகாருக்கு இடமின்றி செய்திட வேண்டும் என அன்போடு கேட்டுகொள்வதாக தெரிவித்துள்ள அவர், வருகின்ற ஜனவரி 31 ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார். 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments