திருவாரூர்-காரைக்குடி இடையே அனைத்து ரெயில் சேவையும் விரைவில் தொடங்கப்படும் என்று திருச்சி ரெயில்வே கோட்ட துணை மேலாளர் ராமலிங்கம் கூறினார்.
ஆய்வு
திருவாரூர் ரெயில் நிலையத்தில் திருச்சி ெயில்வே கோட்ட துணை மேலாளர் ராமலிங்கம் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அவர் ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் குறுங்காடு அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ரெயில் நிலையத்தில் தூய்மை சுகாதாரம் குறித்து பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அனைத்து ரெயில் சேவைகளும்...
திருவாரூர்-காரைக்குடி இடையே உள்ள 75 ரெயில்வே கேட்டுகளில் முன்னாள் ராணுவத்தினர்களை தற்காலிக ரெயில்வே கேட் கீப்பர்களாக பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணி நிறைவு அடைந்ததும் அனைத்து ரெயில் சேவைகளும் முழுமையாக தொடங்கப்படும்.
திருவாரூர் ரெயில் நிலையத்தில் 1-வது மற்றும் 4-வது நடைமேடைகளில் இரண்டு எஸ்கலேட்டர் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2-வது மற்றும் 3-வது நடைமேடைகள் உயர்த்த வேண்டி உள்ளது. நடைமேடை உயர்த்தப்பட்ட பின்னர் எஸ்கலேட்டர் பொருத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கோரிக்கை மனு
ஆய்வின்போது திருவாரூர் ரெயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் பாஸ்கர், திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் திருவாரூர் வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்டோர் பல்வேறு கோரிக்கை மனு அளித்தனர்.
முன்னதாக திருவாரூர் ரெயில் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை ரெயில்வே திருச்சி கோட்ட துணை மேலாளர் நட்டார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.