கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வாரிசுதாரர்கள் விண்ணப்பிக்கலாம்






கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம்
வாரிசுதாரர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றினால் இறந்த நபர்களின் பெயர் பட்டியலில் உள்ள பிற மாவட்டங்களை சேர்ந்த 23 நபர்களின் விவரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இறந்த நபர்கள் நிவாரணம் வழங்க இயலாத நிலை உள்ள 25 இனங்கள் அதற்கான காரணத்துடன் புதுக்கோட்டை மாவட்ட வலைதளத்தில் https://pudukkottai.nic.in/ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

எனவே, மேற்படி இறந்த நபர்களின் வாரிசுதாரர்கள் சம்பந்தப்பட்ட கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை பிரிவில் கொரோனா பரிசோதனை சிகிச்சை ஆவணம், இறப்பு மற்றும் வாரிசு சான்றுகளை தாக்கல் செய்து ரூ.50 ஆயிரம் இழப்பீடு பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments