சென்னை: கரோனா மூன்றாம் அலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இரண்டாவது திருப்புதல் தேர்வுக்கான தேதியையும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. நாளை பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்: "பத்தாம் வகுப்பு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் நடத்திட திட்டமிடப்பட்டிருந்தன.
ஒமைக்ரான் பெருந்தொற்றுக் காரணமாக இன்று (31.01.2022) வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதின் காரணமாக அத்தேர்வுகள் தள்ளிவைக்கப்ப்பட்டன. தற்போது திருப்புதல் தேர்வுகள் மீண்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது." என்று தெரிவித்து அட்டவணை வெளியிட்டுள்ளது.
அட்வ்ட்டவணையில், 10-ஆம் வகுப்புக்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வு பிப்.9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28 ஆம் தேதி முதல் ஏப்.ஆ4 ம் தேதி வரையும்,
12- ஆம் வகுப்புக்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வு பிப்.9 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28 ஆம் தேதி முதல் ஏப்.5 ஆம் தேதி வரையும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் இந்த அறிவிப்பை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.