கோட்டைப்பட்டினம் அருகே புதுக்குடியில் மீனவர் வலையில் சிக்கிய பச்சை ஆமை யை வனத்துறையினர் மீட்டு கடலுக்குள் விட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த தெற்கு புதுக்குடியை சேர்ந்தவர் மாதவன். நாட்டுப்படகு மீனவரான இவர் நேற்று கடலில் மீன் பிடித்துக் கொண்டு கரை திரும்பினார். கரை திரும்பி வலையில் சிக்கியிருந்த மீனை பிரித்தெடுக்கும் போது வலையில் அரியவகை பச்சை ஆமை ஒன்று சிக்கியிருந்தது. அதைப் பார்த்த மீனவர் மாதவன் உடனே வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதன்பேரில் அறந்தாங்கி வனச்சரக அலுவலர் சதாசிவம் தலைமையில் மணமேல்குடி மீனவர்கள் ராஜேந்திரன், அந்தோணிசாமி, அன்புமணி உள்ளிட்டோர் சென்று பச்சை ஆமையை மீட்டு மீண்டும் கடலுக்குள் விட்டனர். புதுக்கோட்டை மாவட்ட கடல் பகுதியில் அரியவகை பச்சை ஆமை மீனவர்கள் வலையில் சிக்கியது இதுவே முதல் முறையாகும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.