நிதிஉதவி திட்டத்தில் தவணை தொகை பெற விவசாயிகளின் ஆதார் எண் சாிபார்ப்பு






புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி கவுரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 39 ஆயிரத்து 837 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின்கீழ் நேரடி சிட்டா உள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக ஏப்ரல், ஆகஸ்டு மற்றும் டிசம்பர் மாதங்களில் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்தொகையானது விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை 10 தவணைகள் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தற்போது விவசாயிகள் 11-வது தவணை தொகையை பெறுவதற்கு தங்களது ஆதார் விவரங்களை சரிபார்த்தல் அவசியமாகும். தங்களது ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரி கவுரவ நிதி உதவி திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து ஒ.டி.பி. மூலம் சரிபார்க்கலாம். ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகில் உள்ள இ-சேவை மைங்களை அணுகி பிரதம மந்திரி கவுரவ நிதி உதவி திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து தங்களது விரல் ரேகையை பதிவு செய்து விவரங்களை சரிபார்க்கலாம். இதற்கான கட்டணமாக ரூ.15 இ-சேவை மையங்களுக்கு செலுத்த வேண்டும். இந்த இரு முறைகளில் ஏதேனும் ஒரு முறையில் பயனாளிகளான விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை வருகிற 28-ம் தேதிக்குள் திட்ட வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments