காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தால் வீடுகள் பாதிக்கப்படுவதாக கூறி பாலன் நகர் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் கடந்த ஆண்டு தொடங்கி பணிகள் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே குன்னத்தூரில் முதல்கட்ட பணிகள் தொடங்கிய நிலையில் கூடுதலாக நிலம் கையகப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. இதற்காக நிலம் அளவீடு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் புதுகோட்டை பாலன் நகர் பகுதியில் இத்திட்ட பணிகள் தொடர்பாக நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்றுள்ளது. இதில் குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களின் வீடும் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
பொதுமக்கள் முற்றுகை
இதனால், அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து நுழைவுவாயிலில் அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தினால் தங்கள் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்படுவதாகவும், அதனால் வேறு பாதையில் இத்திட்டத்தை செயல்படுத்த கோரினர். அப்போது பெண்களில் பலர் தரையில் புரண்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். மேலும், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க அவர்களை அழைத்து சென்றனர். அங்கு அதிகாரிகளிடம் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை முறையிட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.