புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள மதியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முத்தையா(வயது 31). டிராக்டர் ஒன்றை குறைந்த விலைக்கு விற்பதாக முகநூலில் பதிவிடப்பட்ட விளம்பரத்தை இவர் பார்த்தார். அதில், கொடுக்கப்பட்ட வாட்ஸ்-அப் எண்ணை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். அப்போது புதிதாக வாங்கி பயன்படுத்தப்பட்ட டிராக்டரை 2-ம் விற்பனைக்காக ரூ.1½ லட்சத்திற்கு விற்பதாக மர்மநபர் கூறியிருக்கிறார்.
இதற்காக முத்தையா, பல்வேறு தவணைகளாக மர்மநபர் கூறிய வங்கிக்கணக்கில் ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்து 997 வரை செலுத்தியிருக்கிறார். இருப்பினும் மேலும் பணம் கேட்டதால் முத்தையா சந்தேகமடைந்தார். அந்த மர்ம நபர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதையடுத்து புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் முத்தையா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் மர்மநபரின் வங்கி கணக்கு எண் அரியானா மாநிலத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுபோன்று சமூகவலைத்தளங்களில் பணம் அனுப்பி யாரும் ஏமாற வேண்டாம், பொதுமக்கள் உஷாராக இருக்கும்படி சைபர் கிரைம் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.