அறந்தாங்கி,பிப்.26:அறந்தாங்கி இரயில் நிலையத்தில் தென்னக இரயில்கள் அனைத்துக்கும் புக்கிங் ஆபிஸ் தனி கவுன்டரில் அமைத்து தரவேண்டும் என மஜக மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி திருச்சி கோட்ட மேலாளரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.
காரைக்குடி திருவாரூர் விரைவு அகல இரயில் பாதையை ஆய்வு செய்ய தனி இரயிலில் அறந்தாங்கி வருகை தந்த திருச்சி கோட்ட மேலாளரிடம் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி அறந்தாங்கி இரயில் நிலையம் குறித்த தேவைகளை கோரிக்கை மனு கொடுத்தார். அதில்
அறந்தாங்கி மார்க்கமாக காரைக்குடி திருவாரூர் இரயில் பாதை பல ஆண்டுகளுக்கு பின் அகல இரயில் பாதையாக மாற்றி விரைவு இரயிலயும் இயக்கி தந்த தென்னக இரயில்வே மற்றும் திருச்சி கோட்ட இரயில் நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
அறந்தாங்கி இரயில் நிலையத்திற்கு கீழ்க்கண்ட மூன்று தேவைகளை பொதுமக்கள் சார்பாக கோருகிறோம். தென்னக இரயில்கள் அனைத்திற்கும் புக்கிங் ஆபிஸ் அறந்தாங்கி இரயில் நிலையத்தில் தனி கவுன்டராக அமைத்து தரவேண்டும்.இத்தடத்தில் இயக்கப்படும் காரைக்குடி திருவாரூர் இரயில்களை மதுரை மற்றும் சென்னை வரை ஒரே டிக்கெடில் இணைப்பு இரயில்களாக இயக்கவேண்டும். அறந்தாங்கி பாரம்பரியம் மிக்க விவசாய மற்றும் வியாபார தளம் எனவே ஏற்கனவே அறந்தாங்கி இரயில் நிலையத்தில் இருந்த குட்செட்டைவிட பெரிய குட்செட் விரைவில் அமைத்து முதல் ஒருவருடத்திற்கு 50% மானியம் சர்வீஸ் செய்துதருமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.