புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாவட்ட சமூக நலத்துறை மற்றும் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பாலின சமத்துவம் குறித்த மினி மாரத்தான் போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.மா.செல்வி அவர்கள் இன்று (08.03.2022) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணியில் பாலின சமத்துமவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்துகொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகரை வலம் வந்தனர். மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய இந்த மினி மாரத்தான் போட்டியானது புதிய பேருந்துநிலையம், பழைய பேருந்துநிலையம், அண்ணாசிலை வழியாக 2 கி.மீ. தூரம் சென்று மறுபடியும் மாவட்ட விளையாட்டு மைதானத்தை அடைந்தது.
இந்த மினி மாரத்தான் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் மாவட்ட நிருவாகத்தின் சார்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா, மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரன், சென்ட்ரல் ரோட்டரி சங்க பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.