புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவு இந்த ஆண்டு பருவமழை அதிக அளவு பெய்தது. இதனால், மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய்களும் நிரம்பி வழிந்த நிலையில் அவற்றில் நாட்டு மீன்கள் வளர்க்கப்படுகிறது. அவற்றில் ஒரு சில கண்மாய்களில் தண்ணீர் வற்றத்தொடங்கியுள்ளதால் கிராமமக்கள் மீன்பிடித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக அரிமளம் அருகே கே.செட்டிப்பட்டி கிராமத்தில் உள்ள செட்டி கண்மாயில் நீர் குறைந்ததால் பொதுமக்கள் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்தனர். இதுகுறித்து சுற்றுவட்டார கிராம மக்களுக்கும் கிராமத்தார்கள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆர்வமுடன் பங்கேற்பு
அதன்படி சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் உள்ளூர் மக்கள் மீன்பிடி திருவிழாவில் ஆர்வமுடன் பங்கேற்றனர். அவர்கள் மீன்பிடி வலை மற்றும் வேட்டி-சேலை ஆகியவற்றை பயன்படுத்தி மீன் பிடித்தனர். இளைஞர்களிடையே மீன்பிடிக்க ஆர்வம் அதிகமாக இருந்தது. பொதுமக்களும் போட்டிபோட்டு மீன்களை பிடித்தனர். பின்னர், தாங்கள் பிடித்த மீன்களுடன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.