மீமிசல்,கோட்டைபட்டினம்,மணமேல்குடி,ஆவுடையார் கோவில் ஆகிய ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் எனதமிழக அரசுக்கும், உள்ளாட்சி துறை அமைச்சருக்கும் SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தின் கோரிக்கை விடுத்துள்ளனர்
புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரை பகுதிகளான மீமிசல்,கோட்டை பட்டினம்,மணமேல்குடி,ஆவுடையார் கோவில் ஆகிய ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும்.
மேற்கண்ட நான்கு ஊராட்சிகளும் பேரூராட்சிகளாக தரம் உயர்த்த முழு தகுதி பெற்றிருந்தும் 5ஆயிரம் வாக்குகளுக்கு மேலாக வாக்களர்கள் வசிக்கும் பகுதியாக இருந்தும் இதுநாள் வரை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படாமல் இருப்பது கண்டனத்துக்குரியது.
மேற்கூறப்பட்ட ஊர்கள் மக்கள்தொகை அதிகளவில் இருக்கும் ஊராட்சிகளாக இருப்பதால் போதுமான அடிப்படை தேவைகள் கூட பூர்த்தி பெறாமல் இருக்கிறது. இதனால் மேற்கண்ட ஊராட்சியும் அதனை சுற்றியுள்ள கிராமங்களும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன.
இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மீமிசல்,கோட்டைபட்டினம்,மணமேல்குடி,ஆவுடையார் கோவில் ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தி தர வேண்டுமென கேட்டு கொள்கிறோம்.
இவன்:
SDPI கட்சி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.