மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை UDID வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து நிலுவையில் உள்ள மற்றும் நிராகரிப்பு செய்யப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளிடம் புதிதாக விண்ணப்பம் பெறுவதற்கும் மற்றும் UDID அட்டை வேண்டி இது நாள் வரையில் விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகளிடமும் விண்ணப்பங்கள் பெற்று UDID திட்டத்திற்கான இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் கீழ்காணும் விவரப்படி நடைபெறவுள்ளது.
03.03.2022 அன்று கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 04.03.2022அன்று கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும், 08.03.2022 அன்று அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 09.03.2022 அன்று குளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 10.03.2022 அன்று ஆவுடையார்கோயில் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 11.03.2022 அன்று திருமயம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 15.03.2022 அன்று இலுப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 16.03.2022 அன்று மணமேல்குடி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 17.03.2022 அன்று பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 18.03.2022 அன்று விராலிமலை வட்டாட்சியர் அலுவலகத்திலும், 19.03.2022 அன்று ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 22.03.2022 அன்று புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும் முகாம்கள் நடைபெறும். ஏற்கனவே விண்ணப்பித்து இணையதளம் வாயிலாக நிலுவை நிராகரிப்பு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் பெயர் பட்டியில் தங்கள் பகுதியில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வட்டாட்சியர் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
தாங்கள் கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டு தங்களுடைய பெயர் நிலுவைஃநிராகரிப்பு பட்டியலில் இருப்பின் மேற்காணும் தங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் 1.மருத்துவச் சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை தெளிவாக அனைத்து பக்கங்களின் நகல் மற்றும் அசல், 2.ஆதார் அட்டை நகல், 3.பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்-1
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.