போலி குடும்ப அட்டைகளை கண்டறிய 3 மாதங்களுக்கு மேல் அத்தியாவசியப் பொருட்களை பெறாத குடும்ப அட்டைகளின் விவரங்களை சேகரிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள போலி குடும்ப அட்டைகளை கண்டறிய 3 மாதங்களுக்கு மேல் அத்தியாவசியப் பொருட்களை பெறாத குடும்ப அட்டைகளின் விவரங்களை பொது விநியோக தரவு தளத்தில் இருந்து பெற்று அவர்கள் குறிப்பிட்டுள்ள முகவரியில் வசிப்பதை உறுதி செய்ய வேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும்,பிராக்சி முறை பரிவர்த்தனை அங்கீகாரச் சான்றின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் எனவும்,அங்கீகாரச்சன்று இல்லாமல்,பிராக்சி முறையில் குடும்ப அட்டைதாரர்கள் இன்றி பிறருக்கு பொருட்கள் வழங்கப்பட்டு,சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர் பொருட்களை பெறவில்லை என உறுதி செய்யப்படும் பட்சத்தில்,ரேசன் கடை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும்,இறந்தவரின் பெயர் குடும்ப அட்டை மற்றும் குடும்ப அட்டை தரவு தொகுப்பில் இருந்து நீக்கம் செய்யப்படாமல் இருந்தால் அக்குறிப்பிட்ட குடும்ப அட்டையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.