புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வு இலுப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கீரனூர் அரசுமகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்றது. இத்தேர்வினை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்திய மூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்னர் அவர் கூறியதாவது:-
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வானது அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்படுகிறது. இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை மாதந்தோறும் ரூ.1000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும். அந்த முறையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 25 மையங்களில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வினை எழுத 5,317 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.
5,277 பேர் எழுதினர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேர்வினை 5,277 மாணவ-மாணவிகள் எழுதியுள்ளார்கள். அனைத்து மையங்களிலும் தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு தேர்வானது நடைபெற்றது. இத்தேர்வு பணியில் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தேர்வு மையங்களை அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் பார்வையிட்டனர் என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.