உக்ரைனில் இருந்து மும்பை வந்தடைந்தார் மும்பையில் இருந்து சென்னை வழியாக திருச்சி வருகிறார் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மருத்துவக்கல்லூரி மாணவர் ரியாஸ் கான்




ரஷிய போரால் உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்த பணிகளை உக்ரைனில் இருந்து நேரடியாக செய்ய முடியாததால், அங்கு வசிக்கும் இந்தியர்களை அண்டை நாடுகளுக்கு வெளியேற்றி, அங்கிருந்து விமானம் மூலம் தாய்நாடு அழைத்து வரப்படுகின்றனர்.





புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே  கோபாலப்பட்டிணம் அவுலியா நகரைச் சேர்ந்த ஜகுபர் சாதிக் மகன் ரியாஸ் கான் (வயது 20). இவர் உக்ரைன் நாட்டில் உள்ள உஷ்கோரத் நகரில் தங்கி உஷ்கோரத் நேஷனல் பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். இவருடன் தமிழ்நாட்டை சேர்ந்த பல மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். 

தற்போது உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வருவதால் ரியாஸ் மற்றும் நண்பர்கள் அங்கு தவித்து வந்தனர். அவரை மீட்டுத்தரக்கோரி மாணவரின் பெற்றோர் , உறவினர்கள் ‌, சமூக ஆர்வலர்கள்  மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் ரியாஸ் கான் உக்ரைன் நாட்டின் அருகே உள்ள ஹங்கேரி நாட்டிற்கு கடந்த 6 நாட்களுக்கு முன் அழைத்து வரப்பட்டு புடாபெஸ்ட் என்ற இடத்தில் தங்க வைக்கப்பட்டர்.

இதனிடையில் புடாபெஸ்ட்லிருந்து இந்திய அரசு ஏற்பாடு செய்த சிறப்பு விமானத்தில் இந்திய நேரப்படி நேற்று
இரவு 7.30 மணிக்கு மேலாக தாமதமாக புறப்பட்டு மும்பை விமான  நிலையத்திற்கு இன்று காலை 09‌.00 மணியளவில் வந்தடைந்தார்.

மும்பை - சென்னை ‌- திருச்சி - கோபாலப்பட்டிணம்

தமிழக அரசு ஏற்பாடு செய்த விமானத்தில் மும்பையில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு மாலை 6.15 மணிக்கு வருகிறார். 

பிறகு சென்னையில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு  திருச்சிக்கு இரவு 11.15 மணிக்கு வர உள்ளார்.

நாளை திங்கட்கிழமை  காலை சொந்த ஊரான கோபாலப்பட்டிணம் வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments