புதுக்கோட்டை அருகே கிராம நிர்வாக அதிகாரியின் வங்கி கணக்கில் ரூ.2¾ லட்சம் அபேஸ்ஆன்லைனில் மர்மநபர் கைவரிசை; சைபர் கிரைம் போலீசார் விசாரணை




புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது 30). இவர் ஆவுடையார்கோவில் அருகே சிறுமருதூர் கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது வங்கி கணக்கில் கடந்த பிப்ரவரி மாதத்திற்கான சம்பள தொகை வரவு ஆகாமல் இருந்துள்ளது. இதனால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டிருக்கிறார். அந்த மையத்தில் இருந்து பேசிய நபர், இதற்கு தீர்வு காண ஒரு செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்ய கூறியிருக்கிறார். 
இதனை நம்பி அவரும் அதனை பதிவிறக்கம் செய்தார். இந்த நிலையில் விக்னேஸ்வரனின் செல்போனில் இருந்த அந்த செயலியை மர்மநபர் பயன்படுத்தி, அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 71 ஆயிரத்தை வேறு ஒருவர் கணக்கிற்கு பரிமாற்றம் செய்தார்.
போலீசார் விசாரணை
இந்த நிலையில் பணத்தை ஆன்லைனில் மோசடி செய்து எடுத்தது பற்றி அறிந்த விக்னேஸ்வரன் அதிர்ச்சியடைந்தார். அவர் வங்கி வாடிக்கையாளர் மையத்தை தொடர்பு கொண்டு பேசிய செல்போன் எண், போலியானது என்பதும், உண்மையான சேவை மையம் இல்லாமல், அதில் பேசிய மர்மநபர் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 
இதுகுறித்து புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசில் விக்னேஸ்வரன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பணம் பரிமாற்றப்பட்ட வங்கி கணக்கு எண்ணை விசாரித்து, மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments