ஆவுடையர்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை 10.03.2022 மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம்...




ஆவுடையர்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை 10.03.2022 காலை 10 மணியளவில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை UDID  வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து நிலுவையில் உள்ள மற்றும் நிராகரிப்பு செய்யப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளிடம்  புதிதாக விண்ணப்பம் பெறுவதற்கும் மற்றும் UDID அட்டை வேண்டி இது நாள் வரையில் விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகளிடமும் விண்ணப்பங்கள் பெற்று UDID திட்டத்திற்கான இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.க விதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை UDID  வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து நிலுவையில் உள்ள மற்றும் நிராகரிப்பு செய்யப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளிடம்  புதிதாக விண்ணப்பம் பெறுவதற்கும் மற்றும் UDID அட்டை வேண்டி இது நாள் வரையில் விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகளிடமும் விண்ணப்பங்கள் பெற்று UDID திட்டத்திற்கான இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் நாளை 10.03.2022 காலை 10
மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில்  வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

ஏற்கனவே விண்ணப்பித்து இணையதளம் வாயிலாக நிலுவை நிராகரிப்பு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் பெயர் பட்டியில் தங்கள் பகுதியில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வட்டாட்சியர் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தாங்கள் கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டு தங்களுடைய பெயர் நிலுவை, நிராகரிப்பு பட்டியலில் இருப்பின் மேற்காணும் தங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் 1.மருத்துவச் சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை தெளிவாக அனைத்து பக்கங்களின் நகல் மற்றும் அசல், 2.ஆதார் அட்டை நகல், 3.பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்-1

ஆகியவற்றுடன் ஆவுடையர்கோவில் ஒன்றியத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள்
முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பித்திடவும் இனி வரும் காலங்களில் மத்திய அரசின் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பயன்பாட்டிற்கு செயல்படுத்தப்பட உள்ளதால் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தகவல்: கிராம நிர்வாக அலுவலர், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments