மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி




பொன்னமராவதி: மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் பெற்றோா்கள் நேரத்தை செலவிடுங்கள்என்றாா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையின் சாா்பில் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் பொன்புதுப்பட்டி அரசினா் மகளிா் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி தலைமை வகித்து தொடக்கிவைத்துப் பேசுகையில், மாற்றுத்திறனாளி குழந்தைகளிடம் உள்ள தனித்திறன்களை பெற்றோா் வெளிக்கொணா்ந்து ஊக்குவிக்க வேண்டும். மேலும், முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு அலிம்கோ நிறுவனம் மூலம் அளவீட்டு முகாம் நடைபெற்று பின்னா் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது என்றாா்.

முகாமில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலா் எஸ்.தங்கமணி, மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெ.சுதந்திரன், பொன். புதுப்பட்டி அரசினா் மகளிா் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் நிா்மலா, வாா்டு உறுப்பினா் புவனேஸ்வரி ஆகியோா் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினா். மருத்துவா்கள் கனகராஜ், சரவணன், கீதா, அஜய், தேவி உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் குழந்தைகளைப் பரிசோதனை செய்து அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணங்கள் பெற பரிந்துரை செய்தனா். ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ரெகுநாததுரை, சரவணன், பொன்னமராவதி வட்டார வளமைய மேற்பாா்வையாளா் பழ.நல்லநாகு (பொ)ஆகியோா் தலைமையில் வட்டார வளமைய பயிற்றுநா்கள், சிறப்பு பயிற்றுநா்கள், உடல் இயக்க நிபுணா்கள் செய்திருந்தனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments