புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு 2-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணி 11.03.2022 அன்று முதல் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.




புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின்கீழ் 2-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணி, போடப்படவுள்ளது. இதற்காக 3,27,500 டோஸ் தடுப்பூசிகள் இம்மாவட்டத்திற்கு பெறப்பட்டுள்ளது, கோமாரி நோய் கால்நடைகளில் கடுமையான தாக்கத்தையும் விவசாயிகளுக்கு கடும் பொருளாதார இழப்பினையும் ஏற்படுத்தும். கோமாரி நோய் வைரஸ் எனப்படும் நச்சுயிரியால் ஏற்படுகிறது.
இந்நோய் கால் மற்றும் வாய் நோய், காணை மற்றும் கசப்பு நோய் எனவும் அழைக்கப்படுகிறது. கோமாரி நோய் பாதிக்கப்பட்ட கால்நடையிலிருந்து இதர கால்நடைகளுக்கு பரவுகிறது. மேலும், இந்நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் உமிழ்நீர், கழிவுகள், கால்நடைகளை கையாள்வோர், தீவனத்தட்டு மற்றும் பண்ணை பொருட்கள் மூலம் பரவுகிறது. இந்நோய் இளங்கன்றுகளிலிருந்து வயதான கால்நடைகள் வரை பாதிக்கக் கூடியது.

கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் கீழ்;காணும் அறிகுறிகள் தென்படும். காய்ச்சல், தீவனம் திண்ணாமை, வாயிலிருந்து நுரையுடன் கூடிய நூல் போன்று எச்சில் ஒழுகுதல், கால் குளம்புகள், வாய், உதடு, நாக்கு மற்றும் மடிப்பகுதி ஆகிய இ;டங்களில் கொப்புளம் உண்டாகி, புண் ஏற்பட்டு தோல் உரிதல் ஆகிய அறிகுறிகள் ஏற்படும். இளங்கன்றுகளில் இறப்பு நேரிடும். கறவை மாடுகளில் பால் குறையும், சினை பிடிக்கும் திறன் குறையும் மற்றும் சினைப் பசுக்களில் கருச்சிதைவு ஏற்படும் எருதுகளில் வேலைத்திறன் குறையும். நோயிலிருந்து மீண்ட கால்நடைகள் இளைத்து, வெயில் தாக்கத்தினை பொறுக்க முடியாமல் கடுமையாக மூச்சு வாங்கும். தீவனம் சரிவர உண்ணாமல் இருக்கும்.

நோயுற்ற கால்நடைகளை தனியே பிரித்து வைத்து பராமரிக்க வேண்டும். தடுப்பூசி போடுவது ஒன்றே இந்நோயிலிருந்து கால்நடைகளை பாதுகாப்பதற்கான வழியாகும்.

நோயுற்ற கால்நடைகள் பராமரிப்புகளான, நோய் வந்த கால்நடைகளை தனியே பிரித்துக் கட்டி பராமரித்தல். கஞ்சி உணவாக அளிக்க வேண்டும். 1 சதவீதம் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கிருமி நாசினி கரைசலைக் கொண்டு கால்நடைகளின் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்ய வேண்டும். கால்நடைகளில் பாதிப்பு ஏற்பட்டவுடன் அருகிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின்கீழ் 2-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணி தொடங்கப்பட்டு 11.03.2022 முதல் தடுப்பூசி அனைத்து கிராமங்களிலும் போடப்படவுள்ளது. கால்நடை வளர்ப்போர், முகாம் நடைபெறும் இடத்திற்கு தங்கள் கால்நடைகளை தவறாமல் கொண்டு சென்று தடுப்பூசி போட்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

----------------------------------------------------------------------------------------------------------------
செய்தி வெளியீடு - செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், புதுக்கோட்டை.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments