கட்டுமானப் பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு..! சிமெண்ட், மணல் எவ்வளவு தெரியுமா?




சமையல் எண்ணெயை தொடந்து கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.


உக்ரைன் மீதான ரஷ்யப் படைகளின் தாக்குதல் இரண்டு வாரங்களையும் கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. போர் காரணமாக இருநாடுகளிலும் மனித உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை இருநாடுகளும் வெளியிடவில்லை. இந்த போர் காரணமாக சர்வதேச அளவில் வணிக ரீதியான பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக எரிபொருள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய், பாமாயில் உள்ளிட்ட பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.

 
இந்நிலையில், கட்டுமானப் பொருட்களின் விலையும் தற்போது உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். அதன்படி, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ரூ.380-க்கு விற்பனை செய்யப்பட்ட சிமெண்ட் மூட்டை தற்போது ரூ.450 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும், முதல் மற்றும் இரண்டாம் தர கம்பிகள் டன் ஒன்றுக்கு ரூ.75 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.20,000 உயர்ந்து 95 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

 
எம்.சேண்ட் (ஒரு யூனிட்) ரூ.2,800-க்கு விற்ற நிலையில், தற்போது ரூ.3,500க்கும், பி சேண்ட் ரூ.3,500-க்கு விற்ற நிலையில், தற்போது ரூ.4,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முக்கால் இன்ச் ஜல்லி ரூ.2,500-இல் இருந்து ரூ.3,300ஆகவும், கிராவல் மண் ஒரு யூனிட் ரூ.1,500இல் இருந்து ரூ.2,500ஆகவும் உயர்ந்துள்ளது. செங்கல் ஒன்று ரூ.8.50-க்கு விற்ற நிலையில், தற்போது ரூ.11.50-க்கும், பிளைஏஷ் ஒன்று ரூ.6.50-க்கு விற்ற நிலையில், தற்போது ரூ.9.00-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்களின் விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments