கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1995-1996-ம் ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நூல்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு உரிய நூல்கள் வாங்கப்பட்டு இந்தப் பள்ளியில் புதிய நூலகம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளியின் வளர்ச்சி குழு தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேல் புதிய நூலகத்தை திறந்து வைத்தார். இதில் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவ-மாணவிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தங்களது பள்ளி நாட்களின் நினைவுகளை பகிர்ந்து மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். பள்ளிக்கு புதிய நூலகத்தை அமைத்து தந்த முன்னாள் மாணவர்களை ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.