கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் மானாமதுரைக்கு சென்று வந்த டெமு ரெயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் மீண்டும் திருச்சியில் இருந்து மானாமதுரைக்கும், பின்னர் மறுமுனையில் இருந்து திருச்சிக்கும் முன்பதிவில்லா டெமு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இது தொடர்பாக திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் ரெயில் புறப்படும் நேரம், வரும் நேரத்திற்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து மானாமதுரைக்கு (வண்டி எண்:06829) காலை 9.45 மணிக்கு ரெயில் புறப்பட்டு பகல் 12.50 மணிக்கு மானாமதுரை ஜங்ஷன் ரெயில் நிலையத்தை அடைகிறது. இந்த ரெயில் குமாரமங்கலம், கீரனூர், வெள்ளனூர், புதுக்கோட்டை, திருமயம், செட்டிநாடு, கோட்டையூர், காரைக்குடி, தேவகோட்டை ரோடு, கல்லல், பொனான்குடி, சிவகங்கை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதுபோல மறுமுனையான மானாமதுரையில் இருந்து (வண்டி எண்: 06830) பிற்பகல் 2.15 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தடைகிறது. இந்த டெமு சிறப்பு ரெயிலில் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.