கோபாலப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் இரண்டு இடங்களில் புதிதாக "கோபாலபட்டினம்"
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கிழக்கு கடற்கரை சாலையில் சிறு நகராக உள்ளது மீமிசல். திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, தேவகோட்டை, காரைக்குடி, உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் மீமிசல் பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்புகின்றன. இது தவிர இராமேஸ்வரம், இராமநாதபுரம், சாயல்குடி, திருப்புனவாசல், வேதாரண்யம், வேளாங்கன்னி, ஏர்வாடி, சிதம்பரம், புதுச்சேரி மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கேரளாவிற்கு செல்லும் பேருந்துகளும் மீமிசல் வழியாகவே சென்று வருகின்றன. தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் மீமிசலை கடந்து செல்கின்றன.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கோபாலப்பட்டிணம் கிராமம் உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் கோபாலப்பட்டிணம் ஊர் பெயர் பலகை ஒன்று ஏற்கனவே வைக்கப்பட்டுள்ளது.
கோட்டைப்பட்டிணம் , ஜெகதாப்பட்டிணம் பகுதியில் இருந்து வருபவர்களுக்கு மட்டுமே கோபாலப்பட்டிணம் ஊர் பலகை தெரியும் வகையில் இருந்தது. மீமிசலில் இருந்து வரும் வாகனத்திற்கு கோபாலப்பட்டிணம் ஊர் பெயர் பலகை இல்லாமால் இருந்து வந்தது.
இரண்டு இடங்களில் வைப்பு
இந்நிலையில் கோபாலப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் இரண்டு இடங்களில் ஊர் பெயர் பலகை நெடுஞ்சாலை துறை சார்பில் வைக்கப்பட்டது.
புதிதாக வைக்கப்பட்டுள்ள ஊர் பெயர் பலகையில் கோபாலப்பட்டிணம் செல்வதற்கான அம்புக்குறியிட்டு காட்டப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.