அரசநகரிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அரசநகரிப்பட்டினம் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது . அரசுப் பள்ளிகளின் முன்னேற்றம் மற்றும் அதன் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும் , இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படியும் பள்ளிமேலாண்மைக் குழு ஏற்படுத்தப்பட்டது . பள்ளிக் கல்வித்துறை அரசாணையின்படி , பள்ளி மேலாண்மைக் குழுவை 2 ஒருமுறை ஆண்டுகளுக்கு மறுகட்டமைப்பு செய்வது அவசியம் . அதன்படி அனைத்து பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுவை செய்வதற்குத் மறுகட்டமைப்பு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது
அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா பொண்ணமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே அரசநகரிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 20.03.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் பள்ளி மேலாண்மைக் குழு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது .
இந்த நிகழ்ச்சியில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்
1.நடுநிலை பள்ளியாக இருக்கும் நம் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக 2023 குள் மாற்ற வேண்டும் என்று தீர்மானம் நமது ஊர் பெண்கள் மற்றும் ஆண்கள் வெளி ஊர்களில் போய் வாகனங்களில் சென்று படிப்பதால் சிரமத்திற்கு ஆளாக உள்ளதால் அவர்களுக்கு உயர்நிலைக் கல்வி நமது ஊரிலே வருவதற்கு முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது முதல் தீர்மானம்.
2. நமது ஊர் பள்ளியில் மாணவர்கள் பற்றாக்குறையாக இருக்கிறது. தற்போது 2022ஆம் ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை மொத்தம் I - 37 , II - 19 ,III - 28 ,IV - 21 ,V - 25 ,VI - 19 ,VII - 20 ,VIII - 11
மொத்தம் =180
இதன் காரணமாக மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும் வகையில் நாம் வீடுதோறும் அனைவரும் ஊக்குவிக்கும் விதமாக தன் பிள்ளைகளை முன்வந்து சேர்ப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று தீர்மானம் ஏற்றப்பட்டது
3. தற்போது 180 மாணவர்கள் இருக்கும் நிலையில் அவர்களுக்கு படித்து கொடுக்கும் ஆசிரியர்கள் நான்கு ஆசிரியர்கள் மட்டுமே இருக்கிறார்கள். ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருக்கிறது. ஆசிரியர்கள் அதிகரித்து தருமாறு கல்வித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் ஆசிரியர்கள் , ஊர் ஜமாஅத் நிர்வாகிகள் , ஊராட்சி பிரதிநிதிகள் , மற்றும் பெற்றோர்கள் , பொதுமக்கள் இளைஞர்கள் என அனைவரும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள் .
இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் சோ.இராமசாமி த.ஆ அவர்கள் வரவேற்பு நிகழ்த்தினார் . பிறகு ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள் நம் பள்ளி நம் பெருமை பற்றி விளக்கவுரை நிகழ்த்தினார்கள் . இறுதியில் ஒய்.ஆர்.பாக்கியசுதர், ஆசிரியர் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார் .
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.