புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று காலை 150-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்துறை அலுவலக அனுமதியுடன் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
அவர்களில் பெரும்பாலானோர் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் வந்தது.
உடனே அச்சமடைந்த மீனவர்கள் கடற்படையினருக்கு பயந்து வலைகளை சுருட்டிக் கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள். அதில் ஒரு விசைப்படகை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் அதிலிருந்த மீன வர்களான ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 38), கலைமாறன் (29), விஸ்வலிங்கம் (50) ஆகிய மூன்று மீனவர்களையும் எல்லைதாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி கைது செய்தனர்.
மேலும் விசுவலிங்கம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர் படகுடன் மீனவர்களை இலங்கையில் உள்ள மயிலட்டி துறைமுகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் புதுக்கோட்டை மீன வர்கள் விடுதலை செய்யப்படுவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்பது பிற்பகலில் தெரியவரும்.
ஏற்கனவே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரம் மீனவர்கள் 16 பேரை விடுவிக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு கடந்த 28-ந்தேதிதான் மீண்டும் கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் தற்போது புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 3 பேர் மீண்டும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது சக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நேற்று முன்தினம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை சென்று மீன்பிடி கொள்கை உள்ளிட்டவை குறித்து அந்நாட்டு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்வதை இலங்கை அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது.
எனவே மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
இந்திய எல்லை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.