கோபாலப்பட்டிணத்தில் பைத்துல் மால் நடத்திய அறிமுககூட்டம்





கோபாலப்பட்டிணத்தில் பைத்துல் மால் நடத்திய அறிமுககூட்டம் நிகழ்ச்சி  நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள  கோபாலப்பட்டிணத்தில் 31-03-2022 ஷபான் பிறை 27 வியாழக்கிழமை  மக்ரிப் தொழுகைக்கு பிறகு கோபாலபட்டினம் பெரிய பள்ளிவாசலில் கோபாலபட்டினம் பைத்துல்மால் கமிட்டியின் சார்பாக
சிறப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் முதலாவதாக பைத்துல் மால் உறுப்பினர் முகம்மது இப்ராஹீம் அவர்கள் பைத்துல் மால் பற்றிய விளக்கவுரை நிகழ்த்தினார்கள்.
அடுத்தாக தமிழ்நாடு இஸ்லாமிய பைத்துல்மால் கூட்டமைப்பின் தலைவர் ஹாஜி.S.M.ஹிதாயத்துல்லாஹ் அவர்கள்
கலந்துகொண்டு சிறப்புறை ஆற்றினார்கள். இறுதியில் பைத்துல் மால் உறுப்பினர் அப்துல்லா ஹாஜியார் அவர்கள் பைத்துல் மால் பற்றிய விளக்கவுரை நிகழ்த்தினார்கள்

இந்த நிகழ்ச்சியில் ஜமாத்தர்கள், ஆலிம்கள் ,  பெரியவர்கள் இளைஞர்கள்‌ , சிறுவர்கள் பெண்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். (பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது)

நிகழ்ச்சியை பைத்தூல் மால் கமிட்டியார்கள் ஏற்பாடு செய்தனர்.









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments