புதுக்கோட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் சொத்து வரி ரூ.17½ லட்சம் செலுத்தாமல் நிலுவை தொகை வைத்ததாக கூறி புதுக்கோட்டை நகராட்சி அதிகாரிகள் கடந்த 21-ந் தேதி பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு ‘சீல்’ வைத்தனர். மேலும் கேபிள்கள் உள்பட வயர்களை ஜப்தி செய்தனர்.இந்த நிலையில் சொத்து வரி ஏற்கனவே செலுத்தப்பட்டதாக கூறி சீலை அகற்ற பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்குள் புதுக்கோட்டை நகராட்சி அதிகாரிகள் அத்துமீறி நுழைந்து பொருட்களை எடுத்து சென்றதாகவும், நகராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகளை கண்டித்து பி.எஸ்.என்.எல். ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கத்தினர் அலுவலக வளாகத்தில் நேற்று மதியம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிகாரிகள் சங்க மாநில துணை செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். அகில இந்திய துணை தலைவர் சசிக்குமார் தொடக்க உரையாற்றினார். ஓய்வுபெற்ற அதிகாரிகள் சங்க மாநில செயலாளர் காமராஜ் கோரிக்கைகள் குறித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் கண்டன கோஷங்களை எழுப்பினர். முடிவில் நிர்வாகி மகேஷ்வரி நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.