கோபாலப்பட்டிணம் ரஹ்மானிய்யா ஆண்கள் ஹிஃப்ளு மதரஸாவின் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே கோபாலப்பட்டிணத்தில் 30/03/2022 புதன்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய பள்ளிவாசலில் ரஹ்மானிய்யா ஆண்கள் ஹிஃப்ளு மதரஸாவின் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
பெரிய பள்ளிவாசல் மாடியில் சிறப்பான முறையில் இயங்கி வரும் ரஹ்மானிய்யா ஆண்கள் ஹிஃப்ளு மதரஸாவில் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் பிற மாணவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஊர் ஜமாத்தார்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ரஹ்மானிய்யா ஆண்கள் ஹிஃப்ளு மதரஸாவில் 2022-2023 கல்வி ஆண்டுக்கான சேர்க்கை நடைபெறுகிறது.
தகுதி: குர்ஆனை சரளமாக பார்த்து ஓத தெரிந்திருந்தால் போதுமானது.
தொடர்புக்கு: 7539945610, 6374093865
தகவல்
மெளலவி அல்ஹாஃபிழ். ரியாழ் முஹம்மது அல்குத்ஸி,
ஆசிரியர், ரஹ்மானிய்யா ஆண்கள் ஹிஃப்ளு மதரஸா
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.