புதுக்கோட்டை காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்களின் ஏல அறிவிப்பு






புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத கேட்பாரற்ற நிலையில் இருந்த 10 நான்கு சக்கர வாகனங்கள் , 1 மூன்று சக்கர வாகனம் மற்றும் 355 இரண்டு சக்கர வாகனங்கள் என மொத்தம் 366 வாகனங்கள் வருகின்ற 29.03.2022 - ஆம் தேதி காலை 10.00 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.




தற்போது பொது வேலை நிறுத்தம் காரணமாக ஏலத் தேதியானது வரும் 29.03.2022 - ஆம் தேதி மாற்றாக 30.03.2020 - ஆம் தேதி காலை 10.00 மணிக்கு ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏலம் எடுக்க விரும்புவோர் வருகின்ற 29.03.2022 - ம் தேதி மாலை 05.00 மணி வரை புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டு கொள்ளலாம். 

மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர் 28.03.2022 மற்றும் 29.03.2022 ஆகிய தேதிகளில் மாவட்ட காவல் அலுவலகத்தில் ரூ.100 /- முன்பணம் செலுத்தி தங்களது பெயர்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.
 ஏலம் எடுத்த உடன் முழு தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி (GST இருசக்கர வாகனங்களுக்கு 12% மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 18%) முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்று கொள்ளலாம்.

 என புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments