புதுக்கோட்டை மாவட்டத்தை சோ்ந்த படகுகளை இழந்த மீனவா்களுக்கு ரூ. 1.66 கோடி இழப்பீடு வழங்கல்





படகுகளை இழந்த மீனவா்களுக்கு ரூ. 1.66 கோடி இழப்பீடு வழங்கல்
 
படகுக்கான இழப்பீட்டுத் தொகையை மீனவருக்கு வழங்கும் மாநில மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.
 

இலங்கையிலுள்ள பயன்படுத்த முடியாத புதுக்கோட்டையைச் சோ்ந்த மீனவா்களின் படகுகளுக்கான இழப்பீடாக ரூ. 1.66 கோடிக்கான காசோலைகளை மாநில மீன்வளம், மீனவா் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை வழங்கினாா்.



தமிழ்நாடு அரசு அண்மையில் உத்தரவிட்டதன்பேரில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 33 விசைப்படகுகளின் உரிமையாளா்களுக்கு தலா 5 லட்சம் வீதம் மற்றும் ஒரு நாட்டுப்படகு உரிமையாளருக்கு ரூ. 1.50 லட்சம் என மொத்தம் ரூ. 1.66 கோடி மதிப்பிலான காசோலைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த வடவாளம் ஊராட்சியில் இவற்றை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வழங்கினாா். மேலும் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் 1,300 பெண்களுக்கு மொத்தம் 6,500 ஆடுகள் வழங்க மொத்தம் ரூ. 2.48 கோடி ஒதுக்கீட்டில் ஆதரவற்ற பெண்களுக்கு வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தைத்தொடங்கிவைத்தாா்.

விழாவில், மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் சம்பத், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மீன்வளத் துறை துணை இயக்குநா் ஷா்மிளா, உதவி இயக்குநா் சின்னகுப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments