கோபாலப்பட்டிணம் VIP நகர் பகுதியில் வீடுகளை சூழ்ந்த மழைநீரை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கோடை வெயில் உச்சம் தொட்டு வரும் நிலையில் கோபாலப்பட்டிணத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கோடை மழை சற்றே ஆறுதலை அளித்துள்ளது. .
தொடர்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்ட தொடங்கியது. அனல் காற்றிலும், புழுக்கத்திலும் சிக்கித்தவித்த மக்கள் பலர் மழையில் உற்சாகத்துடன் நனைந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணம் VIP நகர் பகுதியில் பலத்த மழை பெய்ததால் வீடுகளை மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் தண்ணீர் வடிய வழியில்லாமல் வீடுகளையும், முக்கிய வீதிகளையும் சூழ்ந்துள்ளது. இதனால் பல்வேறு தொற்றுநோய் பரவும் அபாயமும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்து வருகிறது. பெய்யும் மழை முறையாக அந்தந்த பகுதியில் உள்ள குளங்களுக்கு செல்ல முடியாமல் குடியிருப்புகள், தெருக்களில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக கோபாலப்பட்டிணம் VIP நகர் ஒரு காலத்தில் பொட்டல் காடாக இருந்தது. தற்போது மனைக்கட்டுகளாக மாறி 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தற்போது இந்த நகர் தண்ணீரின் நடுவே உள்ளது. மேலும் பல்வேறு தொற்று நோய்கள் மற்றும் காய்ச்சல் பரவும் பயத்தில் உள்ளனர்.
மேலும், கோபாலப்பட்டிணத்தில் உள்ள சில தெருக்களிலும் தண்ணீர் வடியாமல் குளம்போல் தேங்கி கிடக்கின்றன.
எனவே VIP நகர் பகுதியில் குடியிருப்புகளை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்தவும், வடிநீர் கால்வாய் உடனடியாக அமைத்து மழைநீர் செல்ல வழிவகை செய்ய போர்க்கால அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எப்போதெல்லாம் மழை பெய்கின்றதோ அப்போதெல்லாம் இப்பகுதி குளமாக மாறிப் போய் விடுகிறது என மக்கள் கவலை தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.