65 வயதைக் கடந்த அனைத்து ஹஜ் விண்ணப்பதாரர்களும் நடப்பாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளத் தகுதியற்றவர்கள் என்று சிறுபான்மையினர் நலத் துறை தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தின் தற்போதைய அறிவிப்பின்படி நடப்பாண்டில் (ஹஜ் 2022) ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சவூதி அரேபியா அரசாங்கத்தின் சுகாதாரத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட கரோனாக்கு எதிரான தடுப்பூசிகள் செலுத்தப்பெற்ற 65 வயதிற்குட்பட்டவர்கள் தகுதியானவர்கள்.
ஹஜ் விமானம் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட
கரோனா, பி.சி.ஆர். பரிசோதனையில் நெகடிவ் என உறுதி செய்யப்பட்ட
மருத்துவச் சான்று உடையவர்கள் தகுதியானவர்கள்.
ஹஜ் கிரியைகளை நிறைவேற்றும்போது கடைபிடிக்கப்பட வேண்டிய
அனைத்து சுகாதாரம் சம்பந்தப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஹஜ் பயணத்தில் தவறாது கடைபிடிக்கவேண்டும்
ஏப்ரல் 30 2022 அன்றுள்ள வாறு 65 வயதைக் கடந்த அனைத்து ஹஜ்
விண்ணப்பதாரர்களும் ஹஜ் 2022க்கு தகுதியற்றவராவர். இதனால், பெண் பயணிக்கு ஆண் வழிதுணையாக விண்ணப்பித்த 65 வயதைக் கடந்த மெஹ்ரம் விண்ணப்பதாரர்கள் தகுதியற்றவர்களாகக் கருதப்படுவார்கள்.
30.04.2022 அல்லது அதற்கு முன்னர் 65 வயதை பூர்த்தி செய்யாத சவூதி
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கோவிட்–19–க்கு எதிரான
தடுப்பூசிகளை செலுத்தியிருத்தல் வேண்டும்.
வயது தகுதியின்மை காரணத்தால் பெண் பயணிக்கு மெஹ்ரமாக ஏற்கனவே விண்ணப்பித்த இடத்திற்கு புதிதாக ஆண் வழித்துணையாக விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.