புதுக்கோட்டை ரெயில் நிலையம் வழியாக நாள்தோறும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில்கள் என 20-க்கும் மேற்பட்ட ரெயில்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு வந்து செல்லும் ரெயில்கள் பற்றிய கால அட்டவணை போர்டு மற்றும் பதாகை பழைய நேரப்படியே உள்ளது. தற்போது அமலில் உள்ள புதிய ரெயில்வே கால அட்டவணை பதாகை ரெயில் நிலையத்தில் வைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக ரெயில் நிலைய டிக்கெட் முன்பதிவு மைய கவுண்ட்டரில் உள்ள கண்ணாடியில் சாட்டில் ஸ்கெட்சால் வண்டி எண், ரெயில்கள் விவரம், வந்து செல்லும் நேரம் என வரிசைப்படுத்தி எழுதப்பட்டுள்ளது.
இந்த சிறிய அட்டவணையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள எழுத்துகளை அருகில் நின்று பார்த்தால் தான் நேரம் விவரம் தெரியவரும். ஒரே நேரத்தில் 3-க்கும் மேற்பட்ட பயணிகள் நின்று அந்த அட்டவணையை பார்க்க சிரமப்படக்கூடிய நிலை உள்ளது. ஏனெனில் அதில் உள்ள எழுத்துக்கள் சிறியதாக உள்ளது. எனவே புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு வந்து செல்லும் ரெயில்களின் புதிய எண் விவரம், நேரம் பற்றிய அட்டவணையை ஒரு பதாகை அல்லது போர்டில் பெரிய எழுத்துகளில் தெரியும்படி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.